|
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் சில: (நன்றி :
தினமலர்-வாரமலர்) |
| |
|
|
→ |
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர் முதலியவர்களுக்கு
ஆபத்து காலத்தில் உதவ வேண்டும். |
|
→ |
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில்
இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். |
|
→ |
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவருந்தக்கூடாது. |
|
→ |
நெருப்பை வாயால் ஊதக்கூடாது. |
|
→ |
சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் நீர்
அருந்தக்கூடாது. |
|
→ |
குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி , ஆலயம் இங்கெல்லாம் செல்லும்போது
வெறுங்கையுடன் செல்லக்கூடாது. |
| |
|
→ |
வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது. |
|
→ |
ஈரக்காலுடன் படுக்கக்கூடாது. |
|
→ |
ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்து கழுவக்கூடாது. |
|
→ |
பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், அடுத்தவன் மனைவி இவர்களுடன் உறவு
கொள்ளகூடாது. |
|
→ |
பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல்,
மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள். |
| |
|
→ |
பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது. |
|
→ |
ரிஷி, புரோகிதர், குரு, ஜோதிடர், குடும்ப வைத்தியர், மகான்கள்,
கெட்ட ஸ்த்ரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,
அவர்களீடம் உள்ள தவறுகளை விளம்பரபடுத்தவோ கூடாது. |
| |
|
→ |
நம்மை ஒருவர் கேட்காதவரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது. |
| |
|