சாக்தத்தில் சொல்லப்படும் வித்யைகளில் முதன்மையானதும் சதுர்வித பலபுருஷார்த்தங்களையும் அளிப்பதும் அரியதும் அதிக சூட்சமங்களை கொண்டதும் அதற்கென்ற தனியான நியமங்களை உடையதும், தெய்வங்களே வழிபடுவதும் இறைவனாலேயே உபதேசிக்கப்பட்டதும் இகபரத்திலிருந்து விடுவிப்பதும் ஒன்றே..அது ஸ்ரீவித்யை..முக்கியமான விஷயமாக என் குரு என்னிடம் சொன்னது ஸ்ரீவித்யை உன் ஆசைகளை அடைவதற்கானது அல்ல..உன்னால் எண்ணிகூட பார்க்கமுடியாத உன்னத நிலைக்காணது.ஸ்ரீ வித்யை... சாக்தத்தில் மிகச்சிறந்ததும் அதிக நியமங்களை அடக்கியதுமான ஸ்ரீவித்யை குருமுகமாகவே கற்கப்பட்டுவருகிறது.வித்யைகளில் தலைசிறந்தது.
அனேக சக்திமிகுந்த வழிபாடுகள் சாக்தத்தில் உள்ளது. ஸ்ரீ வித்யைக்கு அடுத்து வலிமையான வித்யைகளாக ஸ்ரீ காலீ, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ ராஜமாதங்கி ஸ்ரீ பைரவி வித்யைகள் அணிவகுக்கின்றன.ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ சண்டி, ஸ்ரீ வனதுர்க்கா போன்ற சக்திமிக்க உபாசனைகளும் சாக்தர்களை வழிநடத்துகின்றது..இவற்றை பற்றி எழுத ஆரம்பிக்கும் பொழுதே ஒரு ஆர்வமும், தயக்கமும் ஒருசேர வருகிறது. ஏகப்பட்ட கேள்விகள் மனதில்.முழுதும் எழத ஆசை..அன்னையின் உத்தரவு என்னவோ? பார்க்கலாம்..புதிய கேள்விகளும் பதில்களும் கிடைக்கும் என நம்புகிறேன்....அன்னை வாராஹி சரண
 
 
 


Vinayagar Slokams Murugan Slokam Sivan Slokam Durga Slokams Vishnu Slokams Lakshmi Stotram Hanuman Slokams
Sudarsan Slokams
Narasimha Slokams Shirdi Sai Slokams  Ayyappan Slokam Other Slokas


 
  All Rights reserved - 2009-2020  
  Powered By www.sriwebsolutions.com